Pink-Pigmented Facultative Methylotrophs
பிபிஎப்எம் (மெத்தைலோ பாக்டீரியா) என்பது காற்று வாழ் உயிரி ஆகும். இயல்பாகவே மெத்தைலோ பாக்டீரியா இலைகளின் மேல்புறத்தில் காணப்படும். உலக அளவில் பல்வேறு பகுதிகளில் நீர் பற்றாக்குறையினால் பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்படுகின்றன. இந்தியாவில் சராசரியாக 62% விளை நிலங்கள் பருவ மழையை சார்ந்து இருக்கிறது. பருவமழை பொய்த்தல் அல்லது முன்பே பருவமழை விடைபெற்றல் போன்ற பல்வேறு பருவ காரணிகளால் பயிர்கள் வறட்சியை எதிர்கொள்கிறது. அவ்வாறு எதிர்கொள்ளும் பயிரினை காக்க இந்த திரவ நுண்ணுயிர் உரமானது உருவாக்கப்பட்டுள்ளது. இது நெற்பயிர் உள்ளிட்ட பல பயிர்களை வறட்சியிலிருந்து காப்பாற்ற மிகவும் உதவுகிறது. பிபிஎப்எம் - பயிர்காக்கும் பாக்டீரியாவின் செயல்பாடுகள் பிபிஎப்எம் என்பது மேல்புறத்திலும் வேர் மண்டலத்திலும் காற்று, தண்ணீர், மண், கல் போன்ற இடங்களிலும் காற்று போகாத இடங்களைத் தவிர அனைத்து இடங்களிலும் காணப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாவாகும். இலைகளின் வேதியியல் கூறுகள் மூலம் உருவாகும் பல கரிமப் பொருள்களில் மெத்தனால் முக்கியமானதாகும். இந்த மெத்தனால் இலைகளில் பெக்டின் எனப்படும் கரிமப்பொருள் சிதைவடையும் போது உருவாகிறது. மெத்தைலோ பாக்டீரியா இலைகளில் இருப்பதால் இலைத்துளை (ஸ்டொமேட்டா) மூலம் வெளியாகும் இந்த மெத்தனாலை உணவாக உட்கொண்டு வாழ்கிறது. இலைத்துளை திறப்பது மற்றும் மூடுவதில் மெத்தைலோ பாக்டீரியாவின் தாக்கம் ஏற்படுவதால் நீர் வெளியாவது குறைகின்றது. பிபிஎப்எம் பாக்டீரியா பயிர் வளர்ச்சி ஊக்கிகளான ஆக்ஸின் மற்றும் சைட்டோகைனினை பயிருக்கு அளிக்கிறது. இதனை அனைத்து வகையான பயிர்களுக்கும் தெளிக்கலாம். பயிர்களின் முக்கியமான வளர்ச்சி காலங்களில் பிபிஎப்எம் 1% முதல் 2% திரவ நுண்ணுயிரை (10 லிட்டர் நீரில் 100 முதல் 200 மில்லி லிட்டர் ஒரு ஏக்கருக்கு ) காலை அல்லது மாலை நேரத்தில் இலைகள் நன்கு நனையும்படி தெளிக்கவும். • இதனால் 15-20 நாட்களுக்கு வறட்சியைத் தாங்கி பயிர் பசுமையாக இருக்கும். மீண்டும் மழை பெய்யும் போது தழைக்கும். • இதனை 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை பயன்படுத்தவும். • இதனை தெளிக்கும்போது பூச்சிக்கொல்லி அல்லது பூஞ்சாணக்கொல்லிகளுடன் கலந்து தெளிக்கக்கூடாது. • பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு அல்லது பின்பு இந்நுண்ணுயிர் திரவத்தை தெளிக்க வேண்டும். பிபிஎப்எம் தெளிப்பதனால் ஏற்படும் நன்மைகள் • விதை முளைப்புத்திறன் மற்றும் நாற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன. • பச்சையம் உற்பத்தி மற்றும் இலைப்பரப்பினையும் அதிகரிக்கின்றது. • வறட்சியை தாங்கும் திறனைப் பயிருக்கு வழங்குகிறது. • பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் நிறம், தரம் மற்றும் எடையை மேம்படுத்துகிறது. • பூக்கும் காலம் மற்றும் அறுவடை காலத்தை குறைக்கிறது. • மகசூலை 10 சதவீதம் அதிகரிக்கிறது.

தங்கத்தின் விலை உயரும். Miss பண்ணாதீங்க. அப்புறம் வருத்தப்படுவீங்க! Reji Thomas | Gold | IBC Tamil

AJ Styles On Retirement, Gunther, Hall Of Fame, John Cena, One More Match?

I bought the Steam Machine after the reviews... Here are my thoughts

Coir Garden Humic Acid

Geopolitical Portrait of Belarus

அவல் வைத்து 10 நிமிடத்தில் பிஸிபெல்லா பாத், தயிர் அவல் இப்படி செய்ங்க | Ashada Ekadashi Spl | Vrat

Nervous System Regulation (999 Hz) | 1 hour handpan music | Malte Marten

Seeman’s Love for Kayal❤️ I’m Nothing Without My Wife”🥹 Emotionally Sings Mayakkama Kalakkama ✨

System Design Course – APIs, Databases, Caching, CDNs, Load Balancing & Production Infra

Photographers Who Became Friends With Wildlife in the Sweetest Way! 😍🐾

Android 17 sucks. So I put Linux on a phone.

Hinter den Kulissen der Feuerwehrmesse Interschutz in Hannover | Die Nordreportage | NDR Doku

Why the Pyramid dream is a lie - and the scam, too

5 Tips to Improve Your German Pronunciation (with Kris Bach) | Easy German Podcast 632

உப்புத்தன்மை கொண்ட மண்ணும் அதன் மேலாண்மையும்

Cheapest Furniture Market | தரமான பர்னிச்சர் தயாரிப்பு விலைக்கு | Wholesale Furniture for home

CHOSEN ONE!! YOUR IDENTITY REVEAL JUST SHOOK THE INTERNET... AND THEIR MINDS

My Dog Got Jealous Of The Baby… Then This Happened 😂🐶

குழித்தட்டுகள் மூலம் மஞ்சள் நாற்று உற்பத்தி

