லிங்கபுரம் மாயமான மர்மம் - வேண்டுமென்றே சிதைக்கப்பட்டதா சிவ லிங்கங்கள் ??
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel Facebook.............. / praveenmohantamil Instagram................ / praveenmohantamil Twitter...................... / p_m_tamil Email id - [email protected] என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan 00:00 - முன்னுரை 00:33 - மிகப்பெரிய லிங்கம் 03:11 - லிங்கத்தை அழிக்க நினைத்தார்களா? 04:17 - லிங்கத்தின் அடிப்பகுதி 05:20 - பொய் கதவுகள் 07:24 - சிலைகள் 07:55 - மிச்சம் இருக்கும் சிவலிங்கத்தின் பகுதிகள் 10:30 - முடிவுரை Hey guys, இன்னைக்கு நாம கம்போடியாவோட குக்கிராமங்கள தாண்டி போய்ட்டு இருக்கோம். மக்கள் நடமாட்டம் இல்லாம ரொம்பவே interior-ஆ இருக்குற இந்த இடத்தோட பேரு தான் Koh Ker Temple Complex, அதாவது Koh Ker கோவில் வளாகம். இங்க ஆயிரம் வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்ட 40 ஹிந்து கோவில்கள் இருக்கு. இந்த மண் ரோட்டுல கார ஓட்டிட்டு போறப்பவே, ரெண்டு பக்கமும் சிதைஞ்சு போன நெறைய கட்டடங்கள் தெரியுது. ஆனா, குறிப்பிட்ட இந்த கோவில் மட்டும் என்ன ரொம்பவே ஈர்க்குது. வெளில நின்னு பாத்தாலே இது எவ்ளோ சேதாரமாகி இருக்குன்னு தெரியுது. இந்த நிலமைல இந்த இடத்த பாக்கவே மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. தரையெல்லாம் பெரிய பெரிய கல்லுங்க இடிஞ்சி கிடக்கு. இது எத குறிக்குது அப்படின்னா, இந்த கோவிலை வேணும்னே யாரோ சேதப்படுத்தி இருக்காங்கன்றத தான். இங்க நடந்த வெளிநாட்டு படையெடுப்போ, மத சண்டையோ இல்ல கொள்ளையோ தான் இதுக்கு காரணமா இருந்திருக்கணும். உள்ள என்ன இருக்குன்னு பாக்குறதுக்காக நான் மேல போனப்போ, எனக்கு ஒரு மரக்கதவு தெரிஞ்சிது. மிருகங்கள் எதுவும் உள்ள வந்துட கூடாதுன்றதுக்காக இந்த கதவ இங்க வச்சிருக்காங்க போல. இந்த கதவு வழியா பாக்கும் போது, உள்ள தெரிஞ்ச ஒரு பெரிய லிங்கத்த பாத்து நான் மெய்மறந்து போய்ட்டேன்னு தான் சொல்லணும். ஏன்னா, அது ரொம்ப உயரமாவும் அகலமாவும் இருக்கு. உடனே கதவ தொறந்துகிட்டு உள்ள போய்ட்டேன். அந்த லிங்கத்த பாத்ததுமே, எனக்கு அத தொட்டு பாக்கணும் போல தோணுச்சு. தொட்டதும், ஏன்னே புரியாத ஒரு வித்தியாசமான உணர்வு. தட்டிப் பாத்தா, ஏதோ மரப் பலகைய தட்டி பாக்குற மாதிரி சத்தம் வருது. இந்த கோவில் உள்பட, இங்க இருக்குற எல்லா கோவில்களுமே கருங்கல்லால ஆனது தான். அப்படி இருக்குறப்போ எப்படி மரப் பலகை மாதிரி சத்தம் வருதுன்னு தெரியல. இந்த லிங்கத்தோட மேல் பாகத்த பாருங்க. எவ்ளோ perfect-ஆ ஒரு dome shape-ல செஞ்சிருக்காங்க? இப்ப இருக்குற மாதிரியான நவீன கருவிகள் இல்லாம எப்படி அவங்களால இவ்ளோ perfect-ஆ செய்ய முடிஞ்சிருக்கும்? என் உயரத்தோட compare பண்ணிப் பாத்தா, இந்த லிங்கம் எப்படியும் ஒரு ஏழடி இருக்கும்னு சொல்லலாம். இந்த பக்கத்துல பாத்தா ஒரு நேர் கோடா ஒரு பாதைய செதுக்கி வச்சிருக்காங்க. எதுக்காக இப்படி செதுக்கி இருக்கனும்? இந்த மாதிரி செதுக்கி வச்சதோட நோக்கம் தண்ணி மாதிரி திரவங்கள ஒரு குறிப்பிட்ட திசைய நோக்கி போக வக்கிறத்துக்காக தான் இருக்கணும். இந்த லிங்கத்துக்கு பூஜை புனஸ்காரமெல்லாம் ஒரு காலத்துல நடந்துகிட்டு இருந்தப்போ, அவங்க அபிஷேகம் பண்ற பால், தேன், தண்ணீ இதெல்லாம், இது வழியா தான் போயிருக்கும். அப்படி போற திரவங்கள் எங்க போய் சேரும்? இதோ, சுவத்துல trapezoid shape-ல ஒரு ஓட்டை தெரியுது பாருங்க. அது கூடத்தான் இந்த லிங்கத்த சேத்திருப்பாங்க. ஸோ, இங்க இருந்து வழியுற தண்ணி, அங்க போய் சேந்துடும். பால், தேன் அபிஷேகமெல்லாம் பண்ணும் போது, இந்த இடத்துல இருந்து தான் அதை எல்லாம் புடிச்சி மக்களுக்கு பிரசாதமா குடுப்பாங்க போல. இந்த லிங்கம் எப்படி ஒடஞ்சிருக்குன்னு பாத்தீங்களா? வெறும் கண்ணால பாத்தாலே, இங்க இருக்குற ரெண்டு விரிசலும் நல்லா தெரியுது. இது இயற்கையா காலப்போக்குல நடந்துச்சா... இல்ல மனுஷங்க இத வேணும்னே ஒடச்சிருப்பாங்களா? இந்த இடத்தை பாருங்களேன். யாரோ இந்த லிங்கத்தை ஒடச்சே ஆகணும்னு இங்க இப்படி கொத்தி வச்சிருக்குறது நல்லா தெரியுது. ஆனா, அடிப்பாகத்துல சிதைஞ்சு இருக்கத்தோட compare பண்னா, இது ஒண்ணுமே இல்லன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு பாதிக்கும் மேல அடிப்பாகத்த வெட்டி எடுத்திருக்காங்க. ஒரு அற்புதமான கலைப்பொருள இப்டி அழிக்க என்ன காரணமா இருக்கும்? அது என்னன்னா, மக்கள் வழிபடுற லிங்கங்கள், அப்புறம் மத்த சிலைகளோட உருவத்த அழிச்சுட்டா, மக்கள் மறுபடியும் அந்த சிலைகள கும்பிட மாட்டாங்கன்னு இவங்க எதிரிங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கணும். ஹிந்துக்களுக்கு அவங்க வழிபடுற லிங்கங்கள் அற்புத சக்திய வெளிப்படுத்துன்னும், ஒருவேளை அதுங்களோட ஒரிஜினல் shape மாறிடிச்சுன்னா, அந்த சக்திகள் போயிடும் அப்படின்னும் ஒரு நம்பிக்கை இருக்கு. அதனால தான் இந்த லிங்கங்கள யாரோ இப்படி சிதைச்சிருக்கணும். சரி, இதுக்கு பின்னாடி என்ன இருக்குன்னு போய் பாப்போம் வாங்க. இந்தப் பக்கத்துல இருந்து பாத்தா இந்த லிங்கத்தோட அடிப்பாகம் நல்லா தெரியுது பாருங்க. நாம முன்னாடி மேல இருந்து பாத்ததால அடிப்பாகம் சரியா தெரியல. ஆனா, இங்க கீழ இருந்து பாக்குறப்போ அடிப்பாகம் தெளிவா தெரியுது. மொதல்ல இந்த லிங்கம் ஏழடி இருக்கும்னு நான் சொன்னேன்ல, ஆனா, இங்க இருந்து பாத்தா எப்படியும் அது அத விட ரெண்டு மடங்கு, அதாவது பதினாலு அடி உயரமாச்சும் இருக்கணும். இந்த தரையை கொஞ்சம் தோண்டிப் பாத்தா, இந்த லிங்கத்தோட இன்னும் சில பாகங்கள் தெரிய வாய்ப்பு இருக்கு. வழக்கமா, இப்படி சில பாகங்கள மண்ணுக்குள்ள பொதச்சி வைப்பாங்க. அதனால இந்த லிங்கம் இன்னுமே பெருசா இருக்கணும். #பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

1000-வருட Original Rajendra Cholan சிற்பம் எங்கே?? 😳 Manambadi / Who destroyed?

எ.வ.வேலு சிக்கினார்? சாலை போடாம ₹4.68 கோடி? | Tamil Pokkisham

இராவணன் வாழ்ந்த அடையாளங்கள்..! வெட்ட வெளியில் சிதறி கிடக்கும் மர்மமான மண்டையோடு..! |பிரவீன் மோகன்

8 | Full Stand-Up Comedy Special | Praveen Kumar | Tamil Comedy

பழங்கால கோவில்களில் X குறி கண்டால் ஜாக்கிரதை!! கோவிலில் மறைந்திருக்கும் ரகசிய சின்னம்! பிரவீன் மோகன்

கோவிலுக்கு அடியில் ரகசிய பாதாள நகரமா? தொடரும் கம்போடியா மர்மங்கள்!!!

Secrets decoded:Bermuda Triangle |அவிழ்க்கப்பட்ட பெர்முடா முக்கோணத்தின் மர்மம்|Big Bang Bogan

பாண்டிச்சேரி மக்களால் என்றுமே மறக்க முடியாத பார்வதி வழக்கு | Pondicherry parvathy Case | Velrajan

5 நிமிடம்,நிறைவேறாத ஆசை ! பாக்யராஜ் இறப்பின் மர்ம பின்னணிகள் | Bayilvan Ranganathan about Bhagyaraj

சக்தி வாய்ந்த சஹஸ்ரலிங்கங்கள் - இந்த லிங்கங்கள் வெளியில் வந்தால் உலகம் அழியுமா?

கீழடி.. சில உண்மைகள் | Keeladi History vs Conflict | Sharanya Turadi | Keezhadi Excavation Truths

யம்மாடியோவ் செஞ்சி மகாராணியோட கோட்டையா இது | Gingee Queen's Fort - Tamil Navigation

😱சிவன் முகத்தை பாத்தீங்களா?!😰-சதாசிவா கோனா மலையேற்றம் | Andhra Series Ep-2 | Sadasiva Kona Trekking

நிலத்துக்கடியில் பதுங்கி இருக்கும் ரகசிய பிரமிடு? பல வருடங்களாக ஒளிந்திருந்த மர்மங்கள் வெளிவந்தன!!

உலகத்தின் வினோதமான கட்டிடக்கலை இது தான்? கோவிலுக்குள் புதைக்கப்பட்ட பல ஆயிரம் டன் மணல்! பகுதி - 7

வியப்பூட்டும் கம்போடியர்களின் ஆமை வழிபாடு! ஆமை சிலைக்குள் நாக ரகசியம் மறைத்து வைக்கப்பட்டதா?

108 லிங்கங்களை மறைத்து வைத்த நோக்கம் என்ன? அங்கோர்வாட்டில் தொடரும் மர்மங்கள் - பகுதி- 6

கம்போடிய மக்களை அச்சுறுத்திய சிவ பிரமிடு - லிங்கத்தை வைத்து அறிவியல் சோதனை செய்யப்பட்டதா?

Ravana's RED Lingam Found? The "Untouchable" Secret Of Cambodia

