ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய்// Oliyaai mazhayaai nee pozhinthai St. Alphonsa Tamil Song lyrics
ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய் வளர்வேன் செழித்தே உயர்ந்திடுவேன் கனிவாய் பரிவாய் நீ அணைத்தால் இனிதாய் புதிதாய் மலர்ந்திடுவேன் இறைவா முதல்வா வழிகாட்டு என் இதயம் உன் இல்லம் விளக்கேற்று (2) 1. துணையாய் அருகே நீ வந்தால் எந்தத் தொலைவும் எளிதாய்க் கடந்திடுவேன் சுனையென அன்பு சுரந்து வந்தால் - நான் சுகமாய் மகிழ்வாய் நடந்திடுவேன் - இறைவா...... 2. ஆற்றலும் அருளும் நீ தந்தால் ஓராயிரம் பணிகள் ஆற்றிடுவேன் தேற்றிட நீயும் அருகிருந்தால் எந்தத் துயரச் சுமையும் தாங்கிடுவேன் - இறைவா ......
