வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில் ஐஸ்வர்ய மகுடத்துடன் ஐஸ்வர்ய மகாலட்சுமி |சுக்கிர தோஷ நிவர்த்தி தலம்
வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி - ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் போகர் சித்தருக்கு அஷ்டமா சித்திகள் கைகூடிய ஆலயம் என்பது மட்டுமல்லாமல் மன்மதனுக்கு அருளல் - மற்றும் ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற ஏராளமான தெய்வீகச் சிறப்பை தன்னகத்தே கொண்ட அற்புதமான ஆலயம்தான் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி - ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் ஆகும். மூலவர்: திருக்காமேஸ்வரர் அம்மன்: சிவகாமசுந்தரி தீர்த்தம்: ஐஸ்வர்ய தீர்த்தம் தலவிருட்சம்: வில்வம் ஊர்: வெள்ளூர் மாவட்டம்: திருச்சி சிவபோக சக்கரம்: போகர் ஏழாயிரம் என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ளபடி திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு அதில் சரியான திதியும், நட்சத்திரமும், ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார். அதன் விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின. இதை அறிந்த பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர். ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை! வெள்ளூர் திருக்காமேஸ்வர பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மகாமண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தை தரிசனம் செய்யலாம். ஆலயத்தின் ஈசான பாகத்தில் சிவலிங்க வடிவில் போகர் சித்தர் அரூபமாக இன்னும் தவம் செய்து வருவதாக ஐதீகம். மேலும், அகத்தியர் நாடியிலும், வசிஷ்டர் நாடியிலும், காகபுஜண்டர் நாடியிலும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களை விவரித்துள்ளனர். தலப்பெருமை: பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த அமுதம் அசுரர் களுக்கு கிடைக்காமல் இருக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியை பார்த்து, சிவபெருமான் மோகித்தார். இதையறிந்த மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். மேலும் இதுபற்றி சிவனிடம் கேட்டறிய அவரை அழைத்தாள். ஆனால் சிவபெருமான் வரவில்லை. இதனால் பூலோகத்துக்குச் சென்று வெள்ளூரில் ஈசனை நோக்கி தவம் செய்தாள். அப்போதும் சிவன் வரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன்பின் ஈசன், மகாலட்சுமி முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்தமாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது. வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெள்ளூர் எனப்பெயர்பெற்றது. வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது. பிராத்தனை தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற தலம் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு தரும். திருமண தடை நீங்க குழந்தை பாக்கியம் கிடைக்க மாங்கல்ய பலம் பெருக வழிபட வேண்டிய தலம். சுக்கிர தோஷம் நீங்க வழிபட வேண்டிய ஐஸ்வர்ய மகாலட்சுமி. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வழிபட வேண்டிய ஞான பைரவர் வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறார். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் +91 7994347966 கோயில் Google map link https://maps.app.goo.gl/ZMsYsm7pUdBVL... அமைவிடம் திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் முசிறிக்கு 7 கி.மீ முன்பாக வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இருந்து நகர பேருந்து வசதி உள்ளது. If you want to Support our channel via UPI ID nava2904@kvb Join our channel Whats app Group https://chat.whatsapp.com/LRPxBQMNHRA... Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்

ஆமூர் ரவீஸ்வரர் கோயில் | ஜாதக தோஷ பரிகார தலம் | சூரிய தோஷம் மற்றும் பித்ரு தோஷம் நிவர்த்தி தலம்

செல்வ வளம் பெருகும் ஐஸ்வர்யா மகாலட்சுமி |Ask Astro

ஆண் குழந்தை வரம் அருளும் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் - நவகிரக ஆலய வழிபாடு | புதன் ஸ்தலம்

செல்வங்களை அள்ளித்தரும் ஆறுவிரல் மகாலட்சுமி - kannan pattachariya | Aaru Viral Mahalakshmi

நேர்கானல் திரு தணிகாசலம் ஜோதிடர் திருப்பூர் N5124

உறையூர் - பஞ்சவர்ணேஸ்வரர் பாடல் பெற்ற ஸ்தலம்

மஹாபெரியவாளின் அற்புதங்கள் 19

குற்றாலம் குற்றாலநாதர் கோயில் பற்றிய அரிய தகவல்கள்! |

கோடீஸ்வர வாழ்க்கை தரும் ஐஸ்வர்யேஸ்வரர் வழிபாடு! Dr.S.Vijay Sethu Narayanan | PuthuyugamTV

"2000 வருடங்களாக இரும்பு போல் இருக்கும் சோழர்களின் ரகசிய சிமெண்ட் கலவை!" (The Ancient Secret Mortar)

போகர் சித்தர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் Ishwarya Mahalakshmi Temple திருக்காமேஸ்வரர் வெள்ளூர்

நம் பாதம் ஒரு முறை இங்கு பட்டாலும் பாவங்களும் தோஷங்களும் விலகும் | திருமங்கலம் சாமவேதீஸ்வரர் கோயில்

Meena Vaishnavi Devi Tours ன் 13.06.2026 ஆன்மீக யாத்திரையில் தரிசனம் செய்ய உள்ள தலங்களின் சிறப்புகள்

செட்டிகுளம் ஏகாம்பரநாதர் கோயில்| 12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய 12 குபேரர்கள் அருளும் ஒரே தலம்

Vijayapathi Vishwamitra | தலையெழுத்தை மாற்றும் ஸ்தலம் | விஜயாபதி விசுவாமித்திரர் கோயில்

வெள்ளூர் வில்வ ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி | Vellur Ishwarya Mahalakshmi Temple

ஆயுள் விருத்தி கொடுக்கும் சூரியனார் கோயில் -Pirugu Prabhakaran | Suriyanar Temple | PambattiSiddhar

தேனூர் நந்திகேஸ்வரர் கோயில் | தீய வழியில் செல்லும் கணவரை திருந்தி வாழ செய்யும் சரபேஸ்வரர் வழிபாடு

😲😱🙏📿வந்தவாசியில் பல வருடங்கள் மண்ணுக்குள் இருந்த சிவன் ஆலயம் மீட்கும் பணி முழு காணொளி ...

