ஶ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் | ஏழு ஜென்மம் பாவம் நீக்கி பிறவாத நிலையை தரும் தலம் | எமன் தலம்
ஶ்ரீவாஞ்சியம் மங்களநாயகி உடனுறை வாஞ்சிநாதர் கோயில் மூலவர்: வாஞ்சிநாதர் அம்பாள்: மங்களாம்பிகை தலவிருட்சம்: சந்தன மரம் தீர்த்தம்: குப்த கங்கை ஊர்: ஶ்ரீவாஞ்சியம் மாவட்டம்: திருவாரூர் வாழ்வில் ஒருமுறையேனும்சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம். உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவராக விளங்கும் பூலோக கைலாயம் என *அழைக்கப்படும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி திருக்கோவில் காசிக்கு ஒப்பான சிறப்புடையதாக ஆறு தலங்கள் போற்றப்படுகிறது. (திருவெண்காடு, திருவையாறு, சாயாவனம், மயிலாடுதுறை, திருவிடை மருதூர், ஸ்ரீவாஞ்சியம்). இந்த ஆறு தலங்களுள் அளப்பரிய மகிமை பொருந்திய தலமாகத் திகழ்வது திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அமைந்துள்ள *ஸ்ரீவாஞ்சியம். பிரளய காலத்தில் உலகம் அழிந்த போது சிவபெருமானும் பார்வதியும் கைலாயத்திலிருந்து புறப்பட்டுப் பிரளயத்தில் அழியாது தப்பிப் பிழைத்த காசியைப் பார்த்து வியந்தனர். அது போலவே தப்பிய இடங்கள் வேறு எங்கெங்கே உள்ளன என்று தேடித் தென் திசைக்கு வந்தனர். அப்போது தான் காவிரிக் கரையில் திருவாஞ்சியம் என்னும் ஊரைக் கண்டு அதன் அழகில் மயங்கி லிங்க வடிவில் சுயம்புவாகச் சிவபெருமானும் ஞானசக்தியாகப் பார்வதி தேவியும் அவ்வூரிலேயே கோயில் கொண்டு விட்டனர். இந்த தலத்தை தான் மிகவும் நேசிப்பதாக சிவன் பார்வதியிடம் கூறியதாக புராணங்கள் சொல்கின்றன. இத்தலத்தின் மூலவர் ஒரு சுயம்பு லிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். *உலகிலுள்ள 64 சுயம்பு லிங்கத் திருமேனிகளுள் இதுவே மிகவும் பழமையானதாகும். தன்னைப் பிரிந்த திருமகளை ஸ்ரீ மீண்டும் அடைய விரும்பி *(வாஞ்சித்து) விஷ்ணு தவமிருந்து சிவனருள் பெற்ற தலம் இதுவாதலால் இத்தலம் ஸ்ரீ வாஞ்சியம் எனப்படுகிறது. மேலும் இத்தலத்தில் சிவனை தரிசனம் செய்பவர்களுக்கு மறு பிறப்பில்லாமலும், அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும் என்றும் *அருளினார். அவ்வாறே இத்தலத்தில் க்ஷேத்திர பாலகனாக விளங்கும் எமனை முதலில் தரிசனம் செய்த பின்பே *இறைவனை தரிசிக்க வேண்டும் என்ற வரமும் அளித்தார். அதன்படி நாள்தோறும் எமதர்ம ராஜனுக்கே முதல் வழிபாடு, ஆராதனைகள்* நடைபெறுகின்றன. இங்குள்ள குப்த கங்கை தீர்த்தத்தில் நீராடி முதலில் யமனை வழிபட்டு பிறகே கோவிலில் மற்றவர்களை வழிபட வேண்டும் என்பது மரபாகும். ஒருமுறை கங்காதேவி சிவனிடம், மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது -இதைப்போக்க தாங்கள் தான் வழி கூறவேண்டும்,என வேண்டினாள். அதற்கு சிவன், உயிர்களை பறிக்கும் எமனுக்கே பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த பாவங்கள் விலகும் என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில் ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய தீர்த்தமாக கருதப்படுகிறது. மரணபயம், மனச்சஞ்சலம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவை நீங்கும்.. இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. இத்தலத்தில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் *மூடப்படுவதில்லை. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்ற தலம் திருவாஞ்சியம் ஆகும். எமன் அருள் பெற்ற தலமாதலால் இங்கு எமனே சுவாமிக்கும் அம்பிகைக்கும் வாகனத் தொண்டு புரிகிறார். ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகுவும் கேதுவும் ஒன்றாக ஒரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம். இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால், பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப்படும். ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு க்ஷத்திர பாலகராக இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது. பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்த படியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர வேண்டிக்கொள்கிறார்கள். ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளை களால் செய்யப்பட வேண்டிய பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி தேடிக்கொள்ளலாம். இதற்கு ஆத்ம தர்ப்பணம் எனப்பெயர். மேலும் இத்தலத்து தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிறவர்களுக்கு சிரமம் நீங்கும் என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம) கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம். பிற தலங்களைப் போல் ஸ்ரீவாஞ்சிய தரிசனப் பேறு எளிதில் கிடைக்கப் பெறுவதில்லை. தல யாத்திரை மேற்கொள்ள விழையும் அன்பர்களுக்கு இடர்களோ தடங்கல்களோ சோதனைகளாக வந்த வண்ணம் இருக்கும். அல்லது பல காரணங்களால் தாமதப் படவும் வாய்ப்புகள் உண்டு. ஆன்மாக்களின் கர்ம வினைப் பலன்கள் எளிதில் இத்தலத்தை அடைய விடுவதில்லை. இருப்பினும் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமியையே உபாயமாகப் பற்றி, உறுதியான பக்தியோடு முயற்சி மேற்கொள்ளும் அடியவர்களுக்குப் பெருமான் பெரும் கருணையோடு தரிசனம் தந்தருளி ஆட்கொள்கிறார். அமைவிடம் குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் உள்ளது. ஶ்ரீவாஞ்சியம் முத்து குருக்கள் தொலைபேசி எண் +91 8973521507 கோயில் Google map link https://maps.app.goo.gl/yzdJNh9aBEs95... if you want to support us via UPI id nava2904@kvb Join this channel to get access to perks: / @mathinam2301 தமிழ்

😲😱இந்த கதவுக்குள் நுழைந்தால் மறு ஜென்மம் கிடையாது | அடுத்த ஜென்மம் கிடையாதா? | கும்பகோணம் 😲

இந்த கோவில் உச்சநீதிமன்றம் மாதிரி | Kovil kadhaigal | Thiruvarur Srivanjiyam temple | Nannilam

திருநறையூர் சித்தநாதேஸ்வரர் கோயில் | மழலை மகாலட்சுமி பிறந்த தலம் | கோரக்கர் சித்தர் வழிபட்ட தலம்

ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் திருக்கோயில் சிறப்பு பார்வை! ஆலய வலம் #puthuyugamtv

தஞ்சாவூர் -- அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்

திருப்பம் தரும் திருவதிகை வீரட்டானேசுவரர் | அட்ட வீரட்டான தலங்கள் | Atta Veerattanam Temple

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் | 21 தலைமுறை பித்ரு சாபம் நீக்கும் தலம் | நவக்கிரக புதன் தலம்

😲😱🙏📿வந்தவாசியில் பல வருடங்கள் மண்ணுக்குள் இருந்த சிவன் ஆலயம் மீட்கும் பணி முழு காணொளி ...

ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர் | சிறுநீரக கோளாறு நிவர்த்தி தலம் | Kidney Stones Problem curing Temple

21 தலைமுறை சாபத்தை நீக்கும் கோவில் | Thiruverkadu Vedapureeswarar Temple

அம்பர் பெருந்திருக்கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோயில் | 13 வகையான சாபங்களை நீக்கும் சர்வதோஷ பரிகார தலம்

காளி வழிபட்ட அம்பர் மாகாளம் மாகாளேஸ்வரர் கோயில் | குபேர யோகம் அருளும் யோக ராகு யோக கேது அருளும் தலம்

ஏழு ஜென்மங்களின் பாவத்தை போக்கும் ஸ்ரீவாஞ்சியம் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வரமுடியும் Srivanjiyam

தீராத நோயை தீர்க்கும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் Thiruvasi Maatruraivaradheeswarar Temple

😳😱🙏📿நா உள்ள வரமாட்டன் என்ன விடுங்க சொல்லும் பெண்கள் என்னதான் இருக்கு உள்ள !

கல் சிலையா? உயிரோடு இருக்கும் மருத்துவரா? | ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜர்!

3 நாட்களில் தீர்வு தரும் முருகன் கோவில், kolanjiyappar temple, Viruthachalam

திருக்கோடிக்காவல் கோடீஸ்வரர் கோயில் |வளமான வாழ்வு தரும் வடுக பைரவர் |3 கோடி மந்திரங்கள் வழிபட்ட தலம்

ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவில்|Pettavaithalai Madhyarjuneshwarar Temple Vlog |DiraDinesh

