வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணி நிரந்தரம் வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தங்களுக்கு முன்னுரிமை வழங்க கோரி முழக்கங்களை எழுப்பி போராட்டம். 55 நாட்களாக முதலமைச்சரை சந்திக்க விடாமல் தடுப்பதாக புகார். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் 6 அலகுகளில் 2630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு 1000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகி்ன்றனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் புதியதாக பொறுப்பேற்றுள்ள அரசு 15ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவித்துள்ள நிலையில் அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் தங்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என வலியுறுத்தி தொழிலாளர்கள் அனல் மின் நிலைய வாயிலில் முழக்கங்களை எழுப்பினர். அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள், அடிப்படை ஊதியம் வழங்கிட வேண்டும், மின் வாரியம் முன்வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. கடந்த ஆட்சிகளில் இருந்தே குறைந்த ஊதியத்திற்கு பணியாற்றி வருவதாகவும் நியாயமான ஊதியம் வழங்கப்படவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர். முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முறையிட தங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அடுத்தடுத்து மின் உற்பத்தி பாதிக்கும் வகையில் மிகப்பெரிய அளவிலான போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஒப்பந்த தொழிலாளர்கள் எச்சரித்தனர்.

6 மாசம் தொடாம இருந்தாரு.. என்னால இருக்க முடியல பெண்ணின் வருத்தம்..! | MeiPorul Kanbathu Arithu

🔴நேரலை 17-07-2026 | திருப்பூரில் செந்தமிழன் சீமான் ! பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா | LIVE |

நம்ப முடியாத அளவுக்கு சிறுவர்கள் பாதிப்பு! 😱 | Rj Chandru Report

பழநி கோயில் நில வழக்கு என்ன? | Badri Seshadri |Palani 100 Crore Temple Land Sold Case |S Ramesh |TVK

100 கோடி பழனி கோவில் நிலத்தை வாங்கிய 2 பேர் யாருடைய பினாமி? ஆதாரத்தை வெளியிட்ட I. Paranthamen

என்ன திமிரா Vijay?! பத்திரிகையாளர் Vijayan கைது? கடும் ஆவேசமான RK பேட்டி

Special Report | நாட்டின் பெருமை..! ஹைட்ரஜன் ரயில்.. சர்வதேச அளவில் பவரை காட்டிய சென்னை

பெண்கள் தனியாக யார் வீட்டிற்கும் செல்வதற்கு முன் இதை பார்க்கவும் | True Crime Story In Tamil

கோச்சுக்காதீங்க என் தாய பத்தி சொல்லும்போது, நாய்னு சொல்லிட்டாரு! Politician Vadivelu Comedy

CM Vijay on Palani mutt 100 Crore land Scam - DMK Ex MLA Paranthaman on Minister TVK Ramesh HR&CE

Ayudha Ezhuthu | "என் பொலம்புறீங்க; நாங்க இல்லனா நீங்க இல்ல.." அரங்கம் அதிர திமுக Vs விசிக மோதல்

முக்கிய பிக்கு மாட்டினார் 😳 12 கோடி ஊழலில் பங்கு! விரைவில் கைது! யோஷித வழக்கு மீண்டும்!

Sangeetha, Vijay பற்றி பேசிய Jason Sanjay | "உறவின் மதிப்பு குறைகிறது" | முதன்முறையாக மனம் திறந்தார்

13 உலக தலைவர்களின் கொ*ல பட்டியல் ஈரான் அறிவிப்பு! அமெரிக்கா தளங்கள் முழுமையாக காலி | Middle East

Rangaraj Pandey Latest | Palani Temple Land Registration | TN Govt | HRCE | CM Vijay | Madurai HC

முட்டையுடன் தப்பித்தவறி கூட சாப்பிட கூடாது 8 உணவுகளை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் | Food

அமைச்சர் ஶ்ரீநாத்தை முற்றுகையிட்ட மக்கள் | அமைச்சர்களால் கடுப்பான விஜய் | விரக்தியில் திருமா |

நடிகைகளின் அம்மாவையும் விட மாட்டாங்க! Adjustment கேட்கும் இயக்குனர் | Heroines Adjustments Tamil

உருவாகிறது திமுக + அதிமுக + பாஜ கூட்டணி | TVK | CM Vijay | DMK | London Visit| Dinamalar SideLights

