முருகு தமிழ்.2150 | திருவாசகம்| திருச்சதகம்| சுட்டறுத்தல்| மாணிக்க வாசகர்| முனைவர் பொன்மணி சடகோபன்|
திருவாசகம் திருச்சதகம் சுட்டறுத்தல் - எண் சீர் ஆசிரிய விருத்தம் (பாடல்கள் 21-30) -- வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் பள்ளந் தாழுறு புனலிற் கீழ்மே லாகப் பதைத்துருகும் அவர்நிற்க என்னை யாண்டாய்க் குள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய் உருகாதால் உடம்பெல்லாங் கண்ணாய் அண்ணா வெள்ளந்தான் பாயாதால் நெஞ்சம் கல்லாம் கண்ணிணையும் மரமாம் தீவினையி னேற்கே. 21 வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று போதுநான் வினைக்கேடன் என்பாய் போல இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை ஆட்கொண்டெம் பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன் முனைவனே முறையோ நான்ஆன வாறு முடிவறியேன் முதல்அந்தம் ஆயி னானே. 22 ஆயநான் மறையவனும் நீயே யாதல் அறிந்தியான் யாவரினுங் கடைய னாய நாயினேன் ஆதலையும் நோக்கிக் கண்டு நாதனே நானுனக்கோர் அன்பன் என்பேன் ஆயினேன் ஆதலால் ஆண்டு கொண்டாய் அடியார்தாம் இல்லையே அன்றி மற்றோர் பேயனேன் இதுதான்நின் பெருமை யன்றே எம்பெருமான் என்சொல்லிப் பேசு கேனே. 23 பேசிற்றாம் ஈசனே எந்தாய் எந்தை பெருமானே என்றென்றே பேசிப் பேசிப் பூசிற்றாம் திருநீறே நிறையப் பூசிப் போற்றியெம் பெருமானே என்று பின்றா நேசத்தாற் பிறப்பிறப்பைக் கடந்தார் தம்மை ஆண்டானே அவாவெள்ளக் கள்வ னேனை மாசற்ற மணிக்குன்றே எந்தாய் அந்தோ என்னைநீ ஆட்கொண்ட வண்ணந் தானே. 24 வண்ணந்தான் சேயதன்று வெளிதே யன்று அனேகன்ஏகன் அணுஅணுவில் இறந்தாய் என்றங்கு எண்ணந்தான் தடுமாறி இமையோர் கூட்டம் எய்துமாறு அறியாத எந்தாய் உன்றன் வண்ணந்தா னதுகாட்டி வடிவு காட்டி மலர்க்கழல்கள் அவை காட்டி வழியற் றேனைத் திண்ணந்தான் பிறவாமற் காத்தாட் கொண்டாய் எம்பெருமான் என்சொல்லிச் சிந்திக் கேனே. 25 சிந்தனை நின்றனக் காக்கி நாயி னேன்றன் கண்ணிணை நின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன் மணிவார்த்தைக்கு ஆக்கி ஐம் புலன்கள் ஆர வந்தெனைஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனை செந் தாமரைக் காடனைய மேனித் தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே. 26 தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக் கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற் கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்டு இனியென்னே உய்யுமாறு என்றென்று எண்ணி அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை முனைவனே முதல்அந்தம் இல்லா மல்லற்கு அரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே. 27 கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே. 28 விச்சைதான் இதுவொப்ப துண்டோ கேட்கின் மிகுகாதல் அடியார்தம் அடிய னாக்கி அச்சந்தீர்த் தாட்கொண்டான் அமுதம் ஊறி அகம்நெகவே புகுந்தாண்டான் அன்பு கூர அச்சன்ஆண் பெண்ணலி ஆகாச மாகி ஆரழலாய் அந்தமாய் அப்பால் நின்ற செச்சைமா மலர்புரையும் மேனி எங்கள் சிவபெருமான் எம்பெருமான் தேவர் கோவே. 29 தேவர்கோ அறியாத தேவ தேவன் செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி மூதாதை மாதாளும் பாகத் தெந்தை யாவர்கோன் என்னையும்வந் தாண்டு கொண்டான் யாமார்க்குங் குடியல்லோம் யாதும் அஞ்சோம் மேவினோம் அவனடியார் அடியா ரோடும் மேன்மேலுங் குடைந்தாடி யாடு வோமே. 30 -- அமைப்பு முருகு தமிழ் முனைவர் பொன்மணி சடகோபன்

முருகு தமிழ்.2152 | பழமுதிர்ச்சோலை திருப்புகழ்| 1-18 பாடல்கள்|அருணகிரியார்| முனைவர் பொன்மணி சடகோபன்|

முருகு தமிழ்.2148 | திருவாசகம் | போற்றித் திரு அகவல் | மாணிக்கவாசகர்| முனைவர் பொன்மணி சடகோபன் |

சிவன் அருள் கிடைக்க இந்த பாடலை கேளுங்கள் | 15 Min Shiva Bhakti Songs | Om Namah Shivaya

அடுத்தடுத்து நடக்க போவதை பாருங்க ! | Vijay | Annamalai | Politics | Jothidar Shelvi | IBC Bakthi

திருமூலர் திருமந்திரம் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Thirumoolar Thirumantiram

உன்னிகிருஷ்ணன் பாடிய 10 சூப்பர் ஹிட் அண்ணாமலையார் பாடல்கள் | UNNIKRISHNNAN ANNAMALAIYAR HIT SONGS

முருகு தமிழ்.2153 திருச்சதகம் | 5. கைம்மாறு கொடுத்தல் | மாணிக்க வாசகர் |முனைவர் பொன்மணி சடகோபன்|

Thevaram Thirumurai 2 - தேவாரப் பாடல்கள் 2

Thiruvasagam - Thiruammanai | திருவாசகம் - திருஅம்மானை | Siva.Damodharan Iyya | Bakthi TV | Tamil

The 2500-Year-Old Secret of Kanchi Kamakoti Peetham!@bharathsubramanian5460

அருணையின் பெருமகனே பாடல் | Arunaiyinperumagane Song| Subam Audio Vision #shivansongs #devotionalsong

முருகுதமிழ்.2145 | பரங்குன்றம் திருப்புகழ் 1-14 பாடல்கள் | அருணகிரியார் | முனைவர் பொன்மணி சடகோபன் |

ODI ODI ODI ODI UTKALANTHA JOTHI ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை | Odi Odi Utkalantha Jothi

அப்பரின் அறவுரைகள் | Apparin Aarauraigal | Pa. Sargurunathan odhuvar-in Thirumurai Isai

Thevaram Thirumurai - தேவாரப் பாடல்கள்

#போற்றி_திரு_அகவல் | Thiruvasagam | Potri thiru agaval | சிவ. தாமோதரன் அய்யா | தமிழர்சமயம்

முருகு தமிழ்.2151 | திருவாசகம் | திருச்சதகம் | ஆத்ம சுத்தி| மாணிக்கவாசகர்| முனைவர் பொன்மணி சடகோபன்|

இந்த ஒரு பேச்சு உங்கள் வாழ்க்கையை மாற்றும்! 😳 | Parveen Sultana | Bharathi Baskar Tamil Motivation

சனிக்கிழமை காலை இந்தப் பாடலைக் கேட்டால், தடைகள் அனைத்தும் விலகும் | Perumal & Anjaneyar Bhakti Songs

