கப்ருகளை ஜியாரத் செய்யலாமா ஒரு முழு விளக்கம்_ᴴᴰ┇ MOULAVI ABDUL BASITH BUKHARI┇Islamiya Otrumai┇
கபுர் வணக்கம் ஒரு பார்வை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "(தரையைவிட ) உயர்ந்துள்ள எந்தக் கப்ரையும் தரைமட்டமாக்காமல் விட்டு விடாதிர் "(அறிவப்பவர் : அலி (ரலி) நூல் : முஸ்லீம்1764 ) عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ , رواه مسلم 969 ,مسند أحمد743 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எதற்கு அனுப்பினார்களோ அதற்காக உன்னை நான் அனுப்புகிறேன். எந்தச் சிலைகளையும் தகர்க்காது விடாதே! உயர்த்தப்பட்ட எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே!' என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் நூல்: முஸ்லிம் 969 இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலிகள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழி கெடுத்து வருகின்றனர் மேற்கண்ட நபிமொழியில் 'கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே' என்று கூறப்படவில்லை. மாறாக 'கப்ரைச் சீர்படுத்து' என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர். 'தரை மட்டமாக்கு' என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. 'ஸவ்வா' என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் 'சீர்படுத்துதல்' என்பது தான் எனவும் வாதிடுகின்றனர். கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர். வானத்தை ஒழுங்கு படுத்தினான் என்று பல வசனங்களில் இதே 'ஸவ்வா' என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர். 'ஸவ்வா' என்பதன் பொருள் சீர்படுத்துவது தான். ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம். கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள். அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள். அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள். இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற அடை மொழிகள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும். உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும்... என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி காரணமாக உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது. ""நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டிய இடத்தில் சில குட்டிச் சுவர்கள் இருந்தன. அதைச் சரி செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர். (புகாரி 410, 1735, 3963) இந்த இடத்திலும் ஸவ்வா என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகு படுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு சரிசமமாக ஆக்கப்பட்டன." " 'உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!' என்பதற்கு 'தரை மட்டமாக்காமல் விடாதே!' என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது உடலை அடக்கம் செய்த பின் எந்தஅளவு மண்ணை வெட்டி எடுத்தோமோ அதை மட்டும் போட்டு மூட வேண்டும். உயரமாக கப்ரு தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக மண்ணை அதிகமாக்கக் கூடாது. (கப்ருகள் மீது கட்டுவதையும், அதில் அதிகப்படுத்தப்படுவதையும், பூசப்படுவதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: நஸயீ 2000, அபூதாவூத் 2807 ) அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரை மட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும். நபிகள் நாயகத்தின் கப்ர் மீது குப்பா எழுப்பப்பட்டதையும் இவர்கள் ஆதாரமாகக் காட்டுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்த ஒன்றை மற்றவர்கள் செய்தால் அது எப்படி ஆதாரமாகும் என்பதைக் கூட இவர்கள் விளங்க மறுக்கின்றனர். ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபிகள் நாயகத்தின் கப்ரை உயரமாகப் பார்த்தார் என்று புகாரி (1302) செய்தியையும் எடுத்துக் காட்டுகின்றனர். ஸுஃப்யான் அத்தம்மார் என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகத் தடை செய்த ஒன்றை இது போன்ற செய்திகளால் முறியடிப்பதில் இவர்கள் கவனம் செலுத்துகின்றனர். நபிகள் நாயகத்தின் பெயராலேயே அவர்களின் கட்டளையை மீறுவதை ஷைத்தான் இவர்களுக்கு அழகாக்கிக் காட்டியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல் ),அவர்கள் ஸியாரத் செய்யுமாறு கூறியுள்ளனர். அந்த அடிப்படையில் நல்லடியார்களின் அடக்கத்தலம் சென்று ஸியாரத் செய்வதும், அவர்களது துஆக்களை வேண்டுவதும் எப்படித் தவறாகும் என்று சிலர் கேட்கின்றனர்.

கந்தூரி வழங்குவதும் ராதிபு வைப்பதும்

சொர்க்கத்தின் இன்பங்கள்!┇Abdul Basith Bukhari┇

மக்கா, ஹஜருல் அஸ்வத் கல் மற்றும் ஸம் ஸம் நீர் இன்னும் பல சிறப்புக்கள்┇Moulavi Abdul Basith Bukhari┇

Last days of the Last Prophet | இறுதி நபியின் இறுதி நாட்கள் | By Abdul Basith Bukhari

When should one recite the Fatiha and shout it out to the deceased?

கப்ருகளை ஸியாரத் செய்வது ஆண்களுக்கு! அது பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டதா?

தர்ஹாகளையும் கபூர்களையும் கட்டுவதர்க்கு யார் அனுமதித்தது_ ᴴᴰ┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇

இமாம் மஹ்தி (அலை) வருகை | COMING OF IMAM AL-MAHDI | STORY EXPLAINED TAMIL AUDIO

கேவலப்படுத்தும் சைத்தானின் சதி! மனிதனுக்கு பொதுவான எதிரி! Ash Sheik Mujahid Ibn Razeen

பெண்கள் கட்டாயம் தெரிய வேண்டிய ஹராமான விடயங்கள்... | Abdul Basith Bukhari Bayan | Tamil Bayan

சோதனை வந்தால் மனதில் கவலை வராமல் இருக்க முழுமையாக இதை கேளுங்கள் | Abdul Basith Bukhari |

யூத கிறிஸ்தவர்கள் உருவான வரலாறு┇Moulavi Mujahid Ibnu Razeen┇Tamil Bayan

நபியுடன் சொர்க்கத்தில் இருக்க ஆசையா? |ᴴᴰ┇ Moulavi Abdul Basith Bukhari

கொடியேற்றிப் பறக்கும் பித்ஆத் |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

Paradise & Hell ┇Sorkam & Naragam┇ by Abdul Basith Bukhari

ஜின்கள் || ஜின்களின் திருமணம் || ஜின்களின் வகை #jingal #jingalinislam #ali #aliahmedrashadi

மறுமையில் மனிதனின் நிலை_ᴴᴰ┇ MOULAVI ABDUL BASITH BUKHARI┇Islamiya Otrumai┇

மிஃராஜ் இரவில் 7 வானங்களில் நடந்த நிகழ்வுகள் | Abdul Basith Bukhari | #tamilbayan #learnwithnusrath

ஈரானின் அதிர்ந்துபோகும் ஷாம் தேசம்: மஹ்தி (அலை) வருகைக்கான அடையாளங்களா இவை? | Israel 🇮🇱 vs Iran 🇮🇷

